ஞாயிறு, 16 அக்டோபர், 2011

என் குருநாதா, சத்குரு நாதா!

ஆனந்த பிரவாகத்தை உணர்ந்தது இல்லை!
ஆனந்த கண்ணீர் விட்டதில்லை!
அமைதியை அறிந்தது இல்லை!
பக்தியை உணர்ந்ததில்லை!
உடம்பில் சக்தி ஓட்டம் உணர்ந்ததில்லை!
மனிதனை வெறும் மனிதனாய் பார்த்ததில்லை!
அன்னியரை வணங்கியதில்லை!
அவரை பார்த்து உள்ளத்தில் இருந்து புன்னகைத்ததில்லை!
24 மணி நேர தன்னார்வ தொண்டினை கேட்டதில்லை!

யோக கலாச்சாரம் பார்த்ததில்லை!
கோயிலின் சக்தி வலயத்தை உணர்ந்ததில்லை!
யோகியை பார்த்ததில்லை!
புத்தனை பார்த்ததில்லை,
கடவுளை கண்டதில்லை!
சத்குருவையும் ஈஷாவையும் பார்க்கும் வரை!

கருத்துகள் இல்லை: